நேற்றைய போட்டியில் மைதானத்துக்குள் புகுந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த வீரர்கள்!

திங்கள், 3 அக்டோபர் 2022 (08:48 IST)
கவுகாத்தியில் நேற்று நடந்த போட்டியின் போது மைதானத்துள் ஒரு பாம்பு புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் ஆடிய 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் போது இந்தியா பேட் செய்யும் போது இடையில் மைதானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அதையடுத்து வீரர்கள் பதற்றமாகி ஒரு பக்கத்துக்கு நகர, பின்னர் அந்த பாம்பை வெளியேற்றிய பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்