188 கோடி லாட்டரி விழுந்த பெண்… ஆனால் கவுண்டமணி நகைச்சுவை போல நேர்ந்த சோகம்!

திங்கள், 17 மே 2021 (16:52 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் லாட்டரிக்கு 188 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அதை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அந்த பெண் சூப்பர் லோட்டோ பிளஸ் என்ற லாட்டரியை வாங்கியுள்ளார். அதற்கான பரிசுத்தொகை 188 கோடி ரூபாய் (26 மில்லியன் டாலர்) அவருக்கு விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசுத்தொகையை அவரால் பெற முடியவில்லை. காரணம் தனது லாட்டரியை அவர் தனது துணிகளோடு சேர்த்து வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து நாசமாக்கிவிட்டார்.

இதனால் இப்போது அந்த கடையில் சிசிடிவி காட்சிகளில் தான் வாங்கிய காட்சி இருக்கும் எனக் கூறி பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் லாட்டரி சீட்டு கையில் இருந்தால்தான் பரிசு கிடைக்கும் என சொல்லிவிட்டார். இதனால் அவர் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்