தற்போது, ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த வீட்டிலிருந்து அமெரிக்க ராணுவத்தினர் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அந்த ஆவணங்களில் பின் லேடன் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தையும் ராணுவத்தினர் வெளியிட்டனர்.
அந்த கடிதத்தில் பின் லேடன், “நீயே எனது கண்ணின் மணியாக இருப்பவள். மேலும், நான் இந்த உலகத்தில் பெற்றவற்றுள் எல்லாவற்றையும் விட, நீ விலை மதிப்பற்றவள். நீ இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், சொர்க்கத்திலும் நீ என் மனைவியாக இருக்க வேண்டும் என உண்மையாகவே விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.