இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரும், குடியரசுக் கட்சி அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி, சமீபத்தில் தனது மனைவி அபூர்வாவுக்காக தங்கள் திருமண நாளில் ஒரு நெகிழ்ச்சியான உரையை பகிர்ந்திருந்தார். அவர்கள் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அந்த பதிவு இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.
அவரது பதிவில், விவேக் ராமசாமி, தனது மனைவி அபூர்வாவுடன் 2011-ல் நடந்த முதல் சந்திப்பின் நினைவுகளை பகிர்ந்தார். அவர் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்தார், ஒன்று அவர்கள் முதல் சந்திப்பின்போது எடுத்தது, மற்றொன்று சமீபத்தில் வெளியே சென்ற போது எடுத்தது.
அபூர்வாவின் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்தார். "நாங்கள் மலை உச்சிக்கு அருகில் சென்றபோது பனிச் சூறாவளி வீசியது. நான் மூடநம்பிக்கையுடன் மேலே செல்ல முயற்சிக்கையில், அவள் என் கையை பிடித்து, கண்களில் நேராகப் பார்த்து, 'நாம் இன்னும் வாழ்நாள் முழுவதும் இருக்கிறோம், பிறகு வந்து இதை பார்க்கலாம் என்றாள். 14 ஆண்டுகளும், இரண்டு பிள்ளைகளும் கழிந்த பிறகு, கடந்த வார இறுதியில் நாங்கள் மீண்டும் அங்கு சென்று எங்கள் 10வது திருமண நாளைக் கொண்டாடினோம். என் வாழ்க்கையின் காதலுக்கும், இந்த பயணத்தில் ஒவ்வொரு நாளுக்கும் நன்றியுடன் இருக்கிறேன்," என்று திரு. ராமசாமி எழுதியுள்ளார்.