அமெரிக்காவில் 10 பேர் பயணம் செய்த சிறிய விமானம் ஒன்று நேற்று மாயமானதாக கூறப்பட்ட நிலையில், அந்த விமானம் கடலில் உள்ள பனி பாறையில் விழுந்து நொறுங்கியதாகவும், அதில் பயணம் செய்த 10 பேரும் பரிதாபமாக பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், திடீரென அந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்ததாகவும், மாயமான அந்த விமானத்தை தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே நோம் நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடலில் 55 கிலோமீட்டர் தொலைவில், தற்போது அந்த விமானம் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்ததாகவும், பலியானவர்கள் விவரம் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.