குடியிருப்பு பகுதியில் குண்டு வீசிய அமெரிக்கா: 11 குழந்தைகள் உட்பட 56 பேர் பலி

புதன், 20 ஜூலை 2016 (16:14 IST)
சிரியாவில் ஐ.எஸ் பயங்கராவதிகள் வசம் உள்ள பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமெரிக்க கூட்டு படைகள் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.


 
 
சிரியாவில் அதிபர் அசாத்தின்  எதிர்பாளர்களுடன் இணைந்து அமெரிக்கா, அரபு, குர்து படைகள் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த அமெரிக்க கூட்டு படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வீசியதில் பலியானவர்களில் 11 பேர் குழந்தைகள் ஆவர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்