டிரம்ப் - புதின் முக்கிய பேச்சு.. முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

Siva

வியாழன், 13 பிப்ரவரி 2025 (07:25 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து,  ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுவது அனைத்து நாடுகளுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், இந்தியா உட்பட பல உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்து வந்தன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அமெரிக்க - ரஷ்ய சிறைக் கைதிகள் பரிமாற்றம் உள்பட சில முக்கிய அம்சங்கள் பேசப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, டிரம்ப் தனது நீண்ட சமூக வலைதள பதிவில், "புதினுடன் தொலைபேசியில் பேசினேன். ஆக்கபூர்வமான உரையாடலாக இருந்தது. உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலர் சக்தி உள்பட பல்வேறு விஷயங்களை பேசினோம். இரு நாடுகளின் பலன்கள் குறித்தும் உரையாடினோம். உக்ரைன் போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகுவதையும் நிறுத்த வேண்டும்" என்று புதினும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

"இருவரும் இணைந்து இனி செயல்படுவோம். அமெரிக்காவுக்கு புதின், ரஷ்யாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். அதிபர் ஜெலென்ஸ்கியுடன் இனிமேல் பேச உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து, உக்ரைன்-ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்