எகிப்து நாட்டில் உள்ள செங்கடலில் ஒரு நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் 44 பயணிகளை ஏற்றி கிளம்புவதற்கு தயாராக இருந்த நிலையில், திடீரென அந்த கப்பல் கவிழத் தொடங்கியது. இதனை அடுத்து உடனடியாக மீட்பு படையினர், கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முயற்சிகளில் ஈடுபட்டனர்.
கடலுக்கடியில் 40 நிமிடங்கள் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த 'சிந்துபாத்' நீர்மூழ்கிக் கப்பலில் சென்றிருந்தனர். 44 பேர் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த படகு தற்போது முழுக்க மூழ்கியதால், சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.