ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தததில், தலிபான் படைகள் பல பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்களில் மோதல் தீவிரம் அடைந்தது.
பாகிஸ்தான் தரப்பு, ஆப்கானிஸ்தானில் இருந்து "முன்னறிவிப்பு இல்லாத" துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.