ரூ.34 லட்சத்திற்கு பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்...

செவ்வாய், 6 ஜூன் 2023 (21:28 IST)
அமெரிக்காவில் ஒரு பள்ளிக்கூடத்தை மாணவர்கள் விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயிர் நிலைப்பள்ளியில் பயிலு சில மாணவர்கள் , பிரபல ரியல் எஸ்டேட் இணையதளத்தில், பள்ளிக்கூடத்தை விற்கும் வகையில் விளம்பரம்  செய்துள்ளனர்.

இதை ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  இந்த இடம் பகுதி நேரம் சிறைச்சாலை, இதில் 15 கழிவறைகள் உள்ளன. நல்ல சமைக்கும் இடமுள்ளளது,. சாப்பிடும் இடமும் விளையாட்டு கூடமும் உள்ளது. இங்கு  நிறைய எலிகள், பூச்சிகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இதன் விலை 42,069 டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) என்று  தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்