அல்ஜீரியாவை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிசு ஒன்று, கால்சிய கல்லாக மாறியிருந்தது, மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
75 வயது மூதாட்டி ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அந்த மூதாட்டிக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்தபோதுதான், இந்த அரிய கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. அவரது வயிற்றில், சுமார் 7 மாதம் வரை உயிருடன் இருந்து இறந்த சிசு ஒன்று, கல் போல் மாறியிருப்பதை கண்டறிந்தனர்.
கருப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்து, ரத்த ஓட்டம் கிடைக்காததால் சிசு இறந்துவிடுகிறது. உடல் தனது இயற்கையான பாதுகாப்பு சக்திகளை பயன்படுத்தி, இறந்த சிசுவை கால்சியமாக மாற்றி, கல் போல ஆக்கிவிடுகிறது. இதனால் தாயின் உடல்நிலை பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. இது உடலின் அற்புதமான தற்காப்பு முறையை வெளிப்படுத்தும் ஒரு சான்றாகும்.