இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி அங்கு ஒரு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த 39 வயது பெண் பயணி ஒருவரை, அவரது இருக்கைக்கு பின்னால் அமர்ந்து கொண்டு, தொடர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண், காவல்துறையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில், அவர்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது அவரது வழக்குறைஞர், முகமது பைரோஸ், "எனது கட்சிக்காரர் வேலையை இழக்கும் அபாயம் உள்ளது. அவர் தனது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு விடுவார்.