இனிமேல் ரஷ்யாவிற்கு பொருட்கள் விற்க மாட்டோம்..! – சாம்சங் நிறுவனம் அறிவிப்பு!

சனி, 5 மார்ச் 2022 (09:51 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யாவில் தங்கள் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.

அதை தொடர்ந்து பிரபல மின்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இண்டெல், ஹெச்.பி, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அதை தொடர்ந்து தற்போது சாம்சங் நிறுவனமும் தனது விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்