கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்க சம்பவத்தில் இதுவரை குறைந்தது 622 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தலிபான் தலைமையிலான உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு, ஜலலாபாத்துக்கு வடகிழக்கே சுமார் 27 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
குனார் மாகாணத்தில் உள்ள நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சாபதாரே ஆகிய மாவட்டங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குனார் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.