பனிப் பாறைகளால் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல்...

வெள்ளி, 10 ஜனவரி 2020 (21:22 IST)
ஷிஸ்பர் பனிப்பாறைகள் உருகுவது பாகிஸ்தான் நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தகவல் வெளியாகிறது.
காலநிலை மாற்றத்தினால்   அண்டார்டிகா முதற்கொண்டு உலகில்  பல்வேறு பகுதிகள் உள்ள பனிப்பாறைகள்  உருகி வருகிறது.  இதற்கு அறிவியலாளர்கள் பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ஷிஸ்பர் என்ற பனிப்பாறைகள் உள்ளது. இதில் ஒருநளைக்கு நான்கு மீட்டர் வேகத்தில் ஹசானாபாத் கிராம மக்களை நோக்கி நகர்ந்து வருவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்