இலங்கையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:18 IST)
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் ஒரு சவரன் தங்கம் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளதால் நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது அடுத்து விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சவரன் விலை ஒன்றரை லட்சமாக இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது  ஒரு சவரன் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு சவரன் விலை சுமார் 40 ஆயிரம் என விற்பனை செய்துவரும் நிலையில் இந்தியாவை விட இலங்கையில் ஐந்து மடங்கு அதிகமாக ஒரு சவரன் விலை விற்பனை ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்