திரவ எரிபொருள் நவீன ராக்கெட், வெடிகுண்டு: மீண்டும் ஆட்டத்தை துவங்கும் வடகொரியா!!

புதன், 23 ஆகஸ்ட் 2017 (15:35 IST)
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என நம்பப்பட்ட நிலையில் மீண்டும் வடகொரியா ஆட்டத்தை துவங்கியுள்ளது. 


 
 
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில், வடகொரியா அதிபர் தற்போது அமெரிக்காவை மதிக்க தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 
 
இந்நிலையில், வடகொரியா அதிபர், ராக்கெட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நேற்று அந்நாட்டின் பார்வையிட்டார். அதன் பின்னர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
 
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், திரவ எரிபொருளால் இயங்கும் நவீனரக ராக்கெட்கள், ராக்கெட்களின் மூக்கு பகுதியில் இணைக்கப்பட்டு அனுப்பும் ஆபத்தான வெடிகுண்டுகளை அதிக அளவில் தயாரிக்குமாறு கிம் உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்