அதில் 10 புதிய கோள்கள் உயிர் வாழத் தகுதியுடையதாக உள்ளது என தெரிவித்தது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் கடந்த நான்கு வருடங்களாக நடத்திய ஆராய்ச்சியில் இதுவரை ஏராளமான கோள்கள் கண்டறியப்பட்ட்டுள்ளது. அதில் 2335 கிரகங்கள் வெளிக்கோள்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியை போன்று உயிர் வாழ தகுதியுடைய 30 கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏலியன்ஸ் குறித்து நாசா தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் உயிர்கள் வாழ்வதற்கான தகுதியுடைய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்ற கூற்று மிகவும் வலுவடைந்து வருகிறது.