காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய அமைதி ஒப்பந்தத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட சர்வதேச அளவில் பல தலைவர்களின் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் 20 அம்ச திட்டத்தை முன்வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த அமைதித் திட்டத்தை ஏற்பதாக கூறியிருக்கிறார். எனினும், ஹமாஸ் அமைப்பினர் அந்த திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த வெற்றிகரமான அமைதி ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் கொண்டு வந்ததாகவும், அதில் அரபு உலகத் தலைவர்கள், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் பங்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.