ஃபேஸ்புக்கில் அறிவித்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாடல் அழகி

புதன், 25 மே 2016 (02:38 IST)
இளம் மாடல் அழகி, காதல் விவகாரத்தில் வெறுப்படைந்ததாக தனது ஃபேஸ்புக்கில் அறிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
சபிரா ஹுசைன்(21) ஒரு மாடல் அழகி. அவர் அதிகாலை 4.30 மணிக்கு, ஒருவேளை நான் இறந்தால், என் மரணத்துக்கு நிர்ஜ்ஹார் தான் காரணம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து எழுதியுள்ளார். பின்னர் அந்த மாடல் அழகி டாக்கா பகுதியில் இருந்த தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.
 
மேலும் இச்சம்பவம் குறித்து வங்கதேச காவல் துறையினர் கூறியதாவது:- 
 
நிர்ஜ்ஹார், சபிராவின் காதலன் என்றும், சபிரா காதல் விவகாரத்தில் வெறுப்படைந்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.  
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்