2 மணி நேரத்தில் ரூ.1.15 கோடி இழந்த ஃபேஸ்புக்

வியாழன், 26 ஜூலை 2018 (13:56 IST)
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பங்கு சந்தையில் 2 மணி நேரத்தில் சுமார் ரூ.1.15 கோடி இழந்து இருக்கிறார்.

 
ஃபேஸ்புக் நிறுவனம் தேர்தல் விவகாரங்களில் தலையிட்டதாக சிக்கிய பின்னர் மார்க் ஜூக்கர்பெர்க் தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறார். சந்தையில் ஃபேஸ்புக் மதிப்பும் குறைந்து வருகிறது. 
 
இன்று அமெரிக்காவில் பலரது பங்குகள் சரிவை சந்தித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பங்கும் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.10 லட்சம் கோடி இழந்துள்ளது.
 
2 மணி நேரத்தில் ரூ.1.15 கோடி இழந்துள்ளார். சமீபத்தில்தான் உலக பணக்கார பட்டியலில் முன்னேறினார். இந்நிலையில் இவரது பங்கு தொடர்ந்து சந்தித்தால் உலக பணக்கார பட்டியலில் சரிவு காணப்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்