திவாலாகும் இலங்கை அரசு? பதவி விலகுகிறாரா மகிந்த ராஜபக்சே!

புதன், 5 ஜனவரி 2022 (15:20 IST)
இலங்கை அரசு கடுமையான பொருளாதார சிக்கலில் இருக்கும் நிலையில் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனாவுக்கு பிறகு சுற்றுலாவை மிகப்பெரிய அளவில் நம்பியிருந்த இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. மேலும் அந்நாட்டு அரசு இயற்கை உரங்களையே முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கை முடிவால் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டு பணவீக்கம் அதிகரித்தது. மேலும் விலைவாசியும் கடுமையான ஏற்றம் கண்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளால் இலங்கை அரசு திவாலாக வாய்ப்புள்ளதாகவும், அதனால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே பதவி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை பிரதமர் அலுவலகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்