ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

Mahendran

செவ்வாய், 21 மே 2024 (12:47 IST)
ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இடைக்கால பிரதமராக துணை அதிபராக இருந்த முகமது முக்பர் என்பவர் பதவி ஏற்றுள்ளார். 
 
இந்த நிலையில் அதிபர் தேர்தலை நடத்துவது குறித்து இடைக்கால அதிபர் முக்பர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பு வழியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
ஈரான் நாட்டின் சட்டத்தின் படி அந்நாட்டின் அதிபர் உயிரிழந்தால் அடுத்த ஐம்பது நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைசி நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அடுத்த ஐம்பது நாட்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலையில் தேர்தலை நடத்த இடைக்கால அதிபர் முகமது முக்பர் ஆலோசனை செய்து வருகிறார். 
 
அனேகமாக வரும் ஜூன் 28ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் தேர்தல் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்