வீடியோ : இந்திய பெண் மீது இனவெறி தாக்குதல் - அமெரிக்காவில் அதிர்ச்சி

வெள்ளி, 3 மார்ச் 2017 (11:22 IST)
இந்தியாவை சேர்ந்த இளம் பெண் மீது அமெரிக்கர் ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்தியாவை சேர்ந்த ஏக்தா தேசாய் என்பவர் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது பணி முடிந்து, ரயில் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதே ரயிலில் பயணித்த அமெரிக்கர் ஒருவர், ஏக்தா ஒரு இந்திய பெண் என தெரிந்து தகாத வார்த்தைகளால் திட்டி இன வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். 
 
அப்போது அந்த ரயிலில் ஏராளமானோர் இருந்தும், யாரும் அவரை தட்டிக் கேட்கவில்லை எனத் தெரிகிறது.எனவே,ஏக்தா அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.  
 
அதன் பின், அங்கிருந்து ஒரு ஆசிய பெண் மீதும், அவர் இன வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஏக்தா தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்