இந்த நிலையில், இன்று திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராட இருப்பதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை டெல்லியில் இருந்து வந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அப்போது, அவருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புனித நீராடினார்.
பிரதமர் மற்றும் முதல்வர் வருகை காரணமாக, பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஏற்கனவே, நேற்று பூட்டான் மன்னர் புனித நீராடியதாகவும், உலகின் பல முன்னணி விஐபிகள் தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.