எனக்கும் அவர்களோடு சேர்ந்து கொள்கைகளுக்காகப் போராட வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு என்னாலான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் அவரை கைது செய்த அமெரிக்க காவல்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
நீதிபதிபதிகள் தங்களது தீர்ப்பில், ’தீவிரவாதிகள் மட்டுமில்லை, கோன்லி போன்றவர்களும் நாட்டுக்கு அச்சத்தை விளைவிக்கக் கூடியவர்கள்’ என்று கூறி அவருக்கு 4 வருட கடுங்காவல் தண்டனையும், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்தனர்.
இதனை மறுத்துள்ள அந்த பெண், ’நீதிபதி சொல்வது போல், என்னால் நாட்டுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. என்னுடைய நோக்கம், யாருக்கும் எந்தக் கேடும் விளைவிப்பது அல்ல.