அமெரிக்காவில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் என்ற இந்தியர், 51 வயதான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து, ஹிலாரி கிளின்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டில் அச்சுறுத்தல்களும் வெறுப்பினவாதக் குற்றங்களும் உயர்ந்துகொண்டே செல்கின்றன. இதற்கு நாட்டின் ஜனாதிபதி தான் காரணம் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. குற்றங்களை ஒடுக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.