அமெரிக்க நாட்டில் கனமழை – 17 பேர் பலி

புதன், 11 ஜனவரி 2023 (22:40 IST)
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் சில நாட்களாகப் பனிப்புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முக்கிய சாலையில்  செல்ல மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்