ஆஸ்திரேலியா: புயல் காற்றுடன் கனமழை 5 பேர் பலி

ஞாயிறு, 3 மே 2015 (11:01 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது வரலாறு காணாத கன மழை பெய்து வருவதால் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கடற்கரைப்பகுதியில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இப்புயலில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. புயலில் சிக்கி இதுவரை 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.             
 
இப்புயலின் கோர தாண்டவத்தால் அந்நாட்டில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்