மர்மம் நிறைந்த பீஜீ கடல் கன்னி!! வெறும் டம்மி!!

ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (11:16 IST)
நியூயார்க் சிட்டியில் நடந்த பி.டி.பர்னம் என்பவருடைய சர்க்கஸ் ஒரு காலத்தில் உலகப் புகழ் பெற்றது. காரணம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பீஜீ கடல் கன்னி. 

 
அந்த கடல் கன்னியின் வால் பாகம் மீன் போலவும், தலைப்பாகம் மனிதனை போன்று திகிலான அமைப்பை கொண்டு இருந்தது. மோசஸ் கிம்பல் என்பவரிடம் அகப்பட்ட இந்த கடல் கன்னியை, வாரம் 12.5 டாலர்கள் எனும் கணக்கில் வாடகைக்கு வாங்கியிருந்தார் பி.டி.பர்னம். 
 
ரொம்ப காலத்துக்கு பிறகு தான் தெரிந்தது இது ஒரு மோசடியான கடல் கன்னியின் உருவமைப்பு என்று. உண்மையில் இதன் வால் பகுதி ஒரு பெரிய மீனுடையது. கழுத்து மற்றும் உடல் ஒரங்கொட்டான் எனும் மனிதக் குரங்கிற்குச் சொந்தமானது. தலை ஒரு குரங்கினுடையது. 
 
இப்படி மூன்றையும் சேர்த்துக்கட்டி கடல் கன்னி என கூறி காசு பார்த்திருக்கிறார் கில்லாடி கிம்பல். 

வெப்துனியாவைப் படிக்கவும்