தலீபான்கள் மற்றும் ஆதரவாளர்கள் பேஸ்புக் கணக்கு முடக்கம்! – பேஸ்புக் அதிரடி!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (13:59 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களது கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் மற்ற நாட்டவர் உயிருக்கு ஆபத்து என்பதை தாண்டி ஆப்கானிஸ்தானிலேயே வசித்த தலீபான் எதிர்ப்பாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலீபான்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் பயங்கரவாதத்திற்கு இடமளிக்காத வகையில் தலீபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிடுவோர் கணக்குகளை முடக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டத்தின்படி தலீபான்கள் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையிலேயே பேஸ்புக் செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்