நள்ளிரவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

செவ்வாய், 1 நவம்பர் 2022 (08:35 IST)
பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான இஸ்லாமாபாத்தில் இருந்து 303 கிலோமீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 
 
இன்று அதிகாலை 1.15 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலநடுக்கம் காரணமாக இஸ்லாமாபாத் பகுதியில் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், இதனால் மக்கள் அத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
இருப்பினும் இஸ்லாமாபாத் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்