அம்மாவின் உலகம் சுற்றும் ஆசை, அவர் உயிரோடு இருக்கும்போது நிறைவேறவில்லை. அதனால் அவர் இறந்த பிறகு, அவருடைய சாம்பலை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து, அவரது மகள் கடலில் தூக்கி எறிந்துள்ளார். "கடல் வழியாக அவர் உலகை சுற்றி வருவார்" என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது அம்மா உலகை சுற்ற வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் ஐந்து குழந்தைகளின் தாயாக இருந்ததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், பிபிசிக்கு அழைத்த பேட்டியில் தெரிவித்தார். இதனை அடுத்து, அவர் இறந்தபின் அவரது அஸ்தியை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதை கடலில் தூக்கி எறிந்ததாகவும், "கடல் வழியே அவர் உலகை சுற்றி வருவார்" என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த பாட்டிலை யாராவது கடற்கரையில் கண்டால், அதை மீண்டும் கடலுக்குள்ளே தூக்கி போட்டு விடுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர் எறிந்த பாட்டில் 12 மணி நேரத்திற்குள் அதே கடற்கரையில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு இளம் பெண் அதைப் எடுத்து, அதில் உள்ள வாக்கியத்தையும் படித்து, மீண்டும் கடலில் வீசிவிட்டதாக தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த பாட்டில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. ஒருசிலர் தங்களது சமூக வலைதளங்களில், "இந்த பாட்டிலை நான் பார்த்தேன்; மீண்டும் கடலில் தூக்கி எறிந்தேன்" என்று பலர் பதிவு செய்து வருகின்றனர்.