புரூணை நாட்டு சுல்தானின் வாரிசு இளவரசர் அஜிம். இவருக்கு 38 வயதாகிறது. இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் இப்போது சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளார். இதனை அந்நாட்டு அரசு, தேசிய வானொலியில் அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.