நீ சாதாரண மனுஷனே இல்லப்பா....ஒரு நபரின் நெஞ்சின் மீது அமர்ந்திருந்த சிங்கம்....

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (23:28 IST)
குஜராத் மாநிலம் அபரம்பரா என்ற கிராமத்தில்  தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் மேல் ஒரு சிங்கம் வந்து அமர்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அபரம்பரா கிராமத்தில் வசித்து வந்தவர்  கேலய்யா.

 இவர் தன் கிராமத்திலுள்ள குடிசை வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நெஞ்சில் எதோ பெரிய உருவம் அமர்ந்திருப்பது போன்று உணர்ந்துள்ளார்.

அப்போது கண் விழிந்துப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அவர் நெஞ்சில் மீது சிங்கம் ஒன்று கால்களை வைத்து அமர்ந்திருந்தது.

பின், தன் முழு பலத்தையும் வைத்து அவர் சிங்கத்தைக் கீழே தள்ளியுள்ளார்.  சிங்கமும் ஓடிவிட்டது. நல்லவேளையாக உயிரி பிழைத்தது பெரும் விஷயம் என பலரும் அவரைப் பார்த்துக் கூற, அவரோ, சிங்கத்துக்கான உணவு நான் இல்லை என்பதால் சிங்கம் ஓடி விட்டது என  தெரிவித்துள்ளார் கேலையா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்