காதலனை வெட்டி பிரியாணி சமைத்து சாப்பிட்ட காதலி

வியாழன், 22 நவம்பர் 2018 (09:07 IST)
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் தனது காதலனை வெட்டி பிரியாணியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் வேலை பார்த்து வந்த மொராக்கோ நாட்டை சேர்ந்த வாலிபருடன் காதல் ஏற்பட்டது.
 
இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அந்த வாலிபர் தனது காதலியிடம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக கூறினார்.
 
இதனால் ஆத்திரமடைந்த பெண், காதலனை வெட்டிக் கொன்று அதில் பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் காதலனின் மற்ற உடல் பாகங்களை நாய்க்கு போட்டுள்ளார்.
 
இதனையறிந்த போலீஸார் அந்த சைக்கோ பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்