முன்னாள் மேயரே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அவலம்!

வியாழன், 15 செப்டம்பர் 2016 (14:36 IST)
அமெரிக்காவில் மேயராக இருந்த ஒருவர் 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 

 
 
ரிச்சார்ட் கீனம் என்பவர் அமெரிக்காவின் ஓஹியோ மாகணத்தை சேர்ந்தவர். ஹப்பார்ட் நகரை சேந்த அவர் கடந்த 2010 முதல் 2011 வரை மேயராக இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் தங்கி இருந்த 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 
அந்த சிறுமியை 4 வயது முதல் 7 வயது வரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் அந்த முன்னாள் மேயர். சிறுமி இது குறித்து அவரின் மனைவியிடம் கூறியுள்ளார். ரிச்சார்டுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை வர அவரது மனைவி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
 
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் முன்னாள் மேயரின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்