ஜெயலலிதா வெற்றி

வியாழன், 19 மே 2016 (15:04 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் சென்னை ஆர்.கே.நகரில் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கட்சி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான ஜெயலலிதா வெற்றிப் பெற்றார். 
 
திமுக சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழனை 42,105 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து அமோக வெற்றிப் பெற்றார். 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

வெப்துனியாவைப் படிக்கவும்