சென்னை எழும்பூரில் இருந்து கயாவுக்கு வாராந்திர விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) முதல் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எழும்பூரில் இருந்து முதல் முறையாக இந்த ரயில் சேவை (2390) 3-ம் தேதி காலை 7.30- க்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 9.50 மணிக்கு கயா சென்றடையும்.
மறுமார்கத்தில் இந்த ரயில் (2389) கயாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.