நண்பர்கள் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் அவரவர் வாழ்க்கையில் இனி என்ன செய்யப்போகிறோம் என்று கூறவேண்டும், அதில் மிகவும் விசித்திரமான கேள்விப்படாத, சுவையான அறிவிப்பை வெளியிடுபவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் தான் இனிமேல் சிகரெட் குடிக்கமட்டேன், என்றும் குடிக்கமாட்டேன் என்றும் இனி கோயிலுக்கு ரெகுலராகப் போவேன் என்றும் கூறினர். ஆனால் எதுவுமே சுவையாக இல்லை.
அப்போது நண்பர்களில் ஒருவர் எழுந்திருந்தார். இனி என் மனைவியுடன் 24 மணிநேரமும் செக்ஸ்தான்! அதுதான் எனது வாழ்க்கை என்றார்! அனைவரும் பயங்கரமாக சிரித்து இவருக்கு பரிசாக ஒரு மோதிரம் அளித்தனர்.
பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்த அதே நபர், மனைவியிடம் பெருமையாக, நான் இன்று ஒரு சபதம் வெளியிட்டேன் அதனைப் பாராட்டி எனக்கு இந்த மோதிரத்தை பரிசாக அளித்தார்கள் என்றார்.
என்ன சபதம்? என்றாள் மனைவி
நான் இனிமே உன்கூட தினமும் இரண்டு வேளை கோயிலுக்கு வருவேன்னு சொன்னேன். எனக்கு பரிசு கிடைத்தது என்றார்.
மனைவி : இப்பவாவது நல்ல புத்தி வந்ததே என்று கணவரைப் பாராட்டினாள்.
மறுநாள் இந்த நபரின் மனைவி ஷாப்பிங் சென்றபோது, அன்று பார்ட்டியில் இருந்த தன் கணவனின் நண்பரைச் சந்திக்கிறாள்.
அவர்: அன்னிக்கு உன் புருஷன் உன்னை வச்சு ஒரு சபதம் எடுத்தான்! அதப்பத்தி உன்கிட்ட சொன்னானோ?
மனைவி: " உம். சொன்னாரு! எனக்கு பயங்கர ஆச்சரியமும் சந்தோஷமுமா இருந்தது. இதுநாள் வரை எப்பவாவதுதான் வருவார்! சில சமயம் தூங்கிப் போயிடுவார் நான்தான் அவர் காதைப்பிடிச்சு திருகி சம்மதிக்க வைக்கப்பேன். அதுக்காக அவரோட போராடாத நாளே இல்லை" என்றாள்
கணவனின் நண்பர் ஒருமாதிரியாக பார்த்ததன் அர்த்தம் அந்த மனைவிக்கு காலம் பூராவும் புரிந்திருக்க வாய்ப்பில்லை.