நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட விடாதீர்கள்: ரஜினிகாந்த் வேண்டுகோள்!

திங்கள், 23 ஜனவரி 2017 (16:55 IST)
இன்று அதிகாலை முதல் சென்னை, மதுரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெறும் அனைத்து  இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்தவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
 
 
போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சில இடங்களில் அடிதடி நடத்தியும் கலைத்து வருகின்றனர். இன்று  காலையிலிருந்து நடந்துவரும் சம்பவங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவுகள் மூலம் தன் கருத்தை  பதிவிட்டு வருகிறார். மேலும் ஜல்லிக்கட்டுக்காக நீதி கேட்பவர்கள் பொறுமை காப்பது அவசியம். என்று பதிவிட்டுள்ளார்.
 
இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே. பாலாஜி, சிம்பு போன்ற சினிமா பிரபலங்களும் அமைதியான போராட்டத்தை  உடனடியாக கலைக்க வேண்டிய அவசியம் என வலியுறுத்தி வருகின்றனர்.
 
"இவ்வளவு போராடிய உங்கள் உழைப்புக்கும், முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும்  வகையில் சமூக விரோத சக்திகள் செயல்படுவதற்கு இடம் கொடுக்காமல் உடனே அறவழி போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்" என்று மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்....

வெப்துனியாவைப் படிக்கவும்