என் வாழ்வில் இப்படி ஒரு பிறந்தநாளை கொண்டாடியதில்லை - யோகி பாபு நெகிழ்ச்சி!

வெள்ளி, 24 ஜூலை 2020 (09:45 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் குல தெய்வ கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை தடபுடலாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கினாள் அது நடைபெறாமல் போயிற்று.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி நடிகர் யோகி பாபு தனது 35 வது பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி ஜாலியாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. தற்ப்போது தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை குறித்து கூறிய யோகி பாபு, " என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை. இந்த பிறந்தநாளில் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக் கொண்டு கொண்டாடியது. அடுத்து எனக்கு குவிந்த வாழ்த்துக்கள்

இந்த பிறந்த நாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது. ஒன்று கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக் கொண்டு கொண்டாடியது. இரண்டாவது குவிந்த வாழ்த்துகள். இந்தளவுக்கு என் மீது அன்பு, பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது இன்னும் உழைப்பதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. வாழ்த்து கூறிய அத்தனை பேருக்கும் நன்றி.

கொரோனா காலம் முடிவடைந்து அனைத்தும் விரைவில் சீராகும். நாம் அனைவரும் விரைவில் பழைய மாதிரி மாஸ்க் இல்லாமல் நண்பர்களுக்குள் கை கொடுத்து, கட்டிப் பிடித்து பழகுவோம் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதற்கு எல்லாம் நான் வணங்கும் முருகன் அருள் புரிவார். என நம்பிக்கையுடன்  கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்