ரஜினியின் வீட்டின் முன் உதவி கேட்டு காத்திருக்கும் பெண்…

புதன், 2 டிசம்பர் 2020 (17:25 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இரண்டு முறை சந்தித்து அவர்களது தனது நிலைப்பாட்டை விளக்கினார். அவர்களது கருத்தையும் ஏற்றுக்கொண்டார். விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டிற்கு முன் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர் தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுத்தால் தன உழைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதாகக் கூற அம்ர்ந்திருக்கிறார்.

ரஜினிகாந்த் அவருக்கு உதவ வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்