பிந்து மாதவியும், வருண் மணியனும் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பிந்துவே ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரும், வருண் மணியனும் காதலிப்பதாக நினைத்தார்கள். இதற்கிடையே பிந்து மாதவி அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.
இதுபற்றி வருண் மணி கூறுகையில், நான் சில நண்பர்களுடன் கடந்த மாதம் மாலத்தீவிற்கு சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டார். நான் பிந்து மாதவியை காதலிக்கவும் இல்லை, அவரை திருமணம் செய்யப் போவதும் இல்லை என்று வருண் தெரிவித்துள்ளார். நானும், பிந்து மாதவியும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் என கூறினார்.