பாகுபலி- 2 வசூல் வருமா என்ற பயத்தில் விநியோகஸ்தர்கள்?

புதன், 19 ஏப்ரல் 2017 (12:49 IST)
ராஜமெளலி இயக்கியத்தில் பாகுபலி படம் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட படங்களில் வரிசையில் உள்ளது.  நாளுக்கு நாள் படத்தை பற்றிய சுவாரஸ்ய செய்திகள் ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பாகுபலி வெற்றியை தமிழகத்தில் யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

 
குறைந்த தொகைக்கு வாங்கி பெரிய லாபத்தை பாகுபலி எட்டிப்பிடித்தது. அந்த வெற்றி பாகுபலி 2 தமிழகத்தில் ரூ 50 கோடி  வரை வியாபாரம் செய்ய வைத்துள்ளது. ரூ 50 கோடி என்றால் கிட்டத்தட்ட எந்திரன் வசூலையே பாகுபலி 2 தமிழகத்தில்  முறியடிக்க வேண்டும்.
 
இப்படம் பெரியத்தொகை என்பதால் இந்த முறை லாபம் வருவதே கஷ்டம் தான் என சென்னையின் முன்னணி திரையரங்க  உரிமையாளர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கு, தமிழை தொடர்ந்து தற்போது கேரளாவில் படத்தை புரொமோட் செய்வதில் படக்குழு பிஸியாக இருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்