விஜய் சொன்ன வார்த்தையைக் கேட்காத வெங்கட்பிரபு… இப்போது வரை வெயிட்டிங்க்தான்!

வியாழன், 8 ஜூலை 2021 (14:51 IST)
நடிகர் விஜய் சொன்ன வார்த்தைக் கேட்காமல் வெங்கட்பிரபு நடந்து கொண்டதால்தான் அவருக்கு இப்போது வரை வாய்ப்புக் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இயக்குனர் வெங்கட்பிரபுவை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாற்றிய படம் என்றால் அது மங்காத்தாதான். அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். அதில் விஜய்யும் ஒருவர்.

அதற்காக விஜய்யை சந்தித்த வெங்கட் பிரபு, ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். ஆனால் அப்போது விஜய் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால் சில மாதம் காத்திருக்க சொல்லியுள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் அதே கதையை கார்த்தியை வைத்து பிரியாணி என்ற பெயரில் படமாக்கினார் வெங்கட் பிரபு. அந்த கோபத்தினால்தான் இப்போதுவரை வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க விஜய் மறுப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்