இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இன்று தனது வருத்தத்தை நீண்ட விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறினார். அதில் தன்னை ஒரு சின்ன நடிகர் என குறிப்பிட்டு, இனியும் தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் இப்படி குரல் கொடுக்கத்தான் செய்வேன்.
இன்று காலை கன்னட மக்களிடம் பேசிய பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி நடிகர் சத்யராஜை சின்ன நடிகர் என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. சத்யராஜ் ஒரு சின்ன நடிகர், சின்ன ரோல் பண்ணியிருக்கிறார். அதுக்காக படத்தை எதிர்க்காதீங்க என ராஜமௌலி கூறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராஜமௌலியிடம் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தவே சத்யராஜ் தன்னை சின்ன நடிகர் என கூறியதாக தகவல்கள் வருகின்றன.