அப்பாவை எப்போது இயக்குவீர்கள்? ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதில்!

புதன், 20 ஏப்ரல் 2022 (23:32 IST)
சமீபத்தில் நடிகர் தனுஷ்  மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது இருவரும் நண்பர்களாக உள்ளனர். ஐஸ்வர்யா இந்தியில் ஓ சாந்தி சால் என்ற ஒரு படத்தை இயக்குவதில் கவனம் செலுத்திவருகிறார்.

இதற்கிடைய ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடுவார்.  இதுதொடர்பாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர், முதலில் எனக்கு இந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அதை   நான் தவிர்த்தேன்.இப்போது மீண்டும் இந்தி படத்தை இயக்குகிறேன்.  அப்பாவை எப்போது இயக்குவீர்கள் என கேட்கிறார்கள்.

அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை, அப்பாவின் ரசிகையாக நான் இருக்கிறேன்….ஆனால் அவரை வைத்துப் படம் இயக்கும் வாய்ப்பு வந்தால் யார் வேண்டாம் என சொல்ல முடியும்?எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்