மகன்களின் அன்பு முத்தம்… கசிந்து உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

செவ்வாய், 22 மார்ச் 2022 (09:43 IST)
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரு மகன்களோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பயணி ஆல்பத்தை தமிழில் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பம் நான்கு மொழிகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக நேற்று தன்னுடைய சமூகவலைதளத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அவர் படத்தின் தலைப்பாக ஓ சாத்தி ச்சால் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை தமிழில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் ‘உங்கள் இருவரையும் குழந்தைகளாகக் கொடுத்ததற்காக கடவுளுக்கு தினமும் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேப்’ என நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்