‘விஸ்வரூபம்-2’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படம்பிடிக்கத் தயாராகி வருகின்றனர் படக்குழுவினர். கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்த ‘விஸ்வரூபம்’, கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. அந்த வருடமே இரண்டாம் பாகத்தையும் ஷூட் செய்தனர். ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால், படம் பாதியிலேயே நின்றது. இதனால், அதுவரை படத்துக்கு ஆன செலவை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு, படத்தின் உரிமையை வாங்கிவிட்டார் கமல்.